தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டார். இதன் பிறகு கேரளத்தின் கவர்னர் அர்லேகர் தமிழ்நாடு கவர்னர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.
தற்போது தமிழ்நாட்டிற்கான கவர்னராக சமீபத்தில் உளவுத்துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற தபான் குமார் தெக்கா-வை நியமிக்க இருப்பதாக டெல்லி அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு அடிபடுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
![]()
முதலில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை காண்ட்ராக்ட் பணியாளர்களிடையே நக்சல் ஆதரவாளர்கள் உள்ளே ஊடுறுவி இருக்கிறார்களாம். சர்வேதச அளவில் சிந்தெட்டிக் போதைப்பொருட்களின் மையமாக தமிழ்நாடு மாறிவருகிறதாம். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் சீனாவின் உளவுத்துறையும் சமீபத்தில் தமிழ்நாட்டை குறிவைத்து இருக்கிறதாம். இந்த விவகாரங்களை டீல் செய்யதான் ஸ்பெஷல் அசைன்மெண்ட் கொடுத்து தபான் குமார் தெக்கா-வை அனுப்புவதாகவும் பேச்சு அடிபடுகிறது.
