2006-2011 கலைஞர் ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையில் இரண்டு Special cell இருந்தது. இதில் முதல் பிரிவு முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மீதான வழக்கை நடத்தியது இரண்டாவது பிரிவு மற்ற அமைச்சர்கள் மீதான வழக்கை நடத்தியது.
இவை இரண்டுக்கும் சேர்த்து என்.நடராஜன் ஸ்பெஷல் பப்ளிக் பிரசிகியூட்டராக இருந்தார். இவர் மும்பை தீவிரவதாத தாக்குதல் வழக்கை நடத்தியவர். இதேபோல ஒரு கட்டமைப்பை விஜய் ஏற்படுத்த வேண்டும் என்று தவெக ஆதரவு அதிகாரிகள் மத்தியில் கோரிக்கை எழுகிறதாம்!
தற்போது திமுக முன்னாள் அமைச்சர்கள் வழக்குகள் பாய ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் கலைஞர் காலத்து கட்டமைப்பை மீண்டும் விஜய் உருவாக்கினால்தான் இந்த முறையாக தண்டனை பெற்றுத்தர முடியும் என ஆலோசனை தருகிறார்களாம்.
